பல்லவி
எவருன்னாரு ப்3ரோவ
இந்த தாமஸமேலனய்ய
அனுபல்லவி
விவரம்பு3க3 தெலுபவய்ய
விஸ்1வேஸ1 ஸ்ரீ பஞ்ச நதீ3ஸ1 (எ)
சரணம்
மனஸாரக3 த்4யானிம்பனு
மனஸு நிலுபு மர்மம்பு3 தெலிபி
தனவாட3னே தலசி தை4ர்ய-
மொஸகு3 த்யாக3ராஜ வினுத (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/-உன்னாரு/ ப்3ரோவ/
எவர்/ உள்ளனர்/ காப்பதற்கு/
இந்த/ தாமஸமு/-ஏலனய்ய/
இத்தனை/ தாமதம்/ ஏனய்யா/
அனுபல்லவி
விவரம்பு3க3/ தெலுபவய்ய/
விவரமாக/ தெரிவியுமய்யா/
விஸ்1வ/-ஈஸ1/ ஸ்ரீ பஞ்ச நதீ3-ஈஸ1/ (எ)
அண்டம்/ ஆள்வோனே/ திருவையாற்றப்பா/
சரணம்
மனஸாரக3/ த்4யானிம்பனு/
மனதார/ தியானிப்பதற்கு/
மனஸு/ நிலுபு/ மர்மம்பு3/ தெலிபி/
மனத்தினை/ கட்டும்/ மருமத்தினை/ தெரிவித்து/
தனவாடு3/-அனே/ தலசி/ தை4ர்யமு/-
தன்னவன்/ என்றே/ எண்ணி/ தைரியம்/
ஒஸகு3/ த்யாக3ராஜ/ வினுத/ (எ)
அருள்வாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பட்டதா என்ற ஐயமிருப்பதாகவும், இப்பாடலை அவருடைய சில சீட பரம்பரையினர் மட்டுமே பாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Top